விருதுநகர் மாவட்டம், முத்துராமன்பட்டி-அல்லம்பட்டி எர்ற கொல்ல இராஜகம்பளத்தாருக்கு பாத்தியப்பட்ட பெருமாள் கோவிலில் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. பெருமாள் கோவிலுக்கு வருகைதந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான திரு.மாஃபா பாண்டியராஜன் அவர்கள், அங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப்பணியை பார்வையிட்டு, அருகிலிருந்த சமுதாய மக்களிடம் நலம் விசாரித்தார். திருமண மண்டபத்தில் சிறுதுநேரம் அமர்ந்திருந்து கம்பளத்தார் சமுதாய பெரியோர்கள் மற்றும் கட்சிப்பிரமுகர்களிடம் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை செய்தார்.

கட்டுமானப்பணியினை பார்வையிட வந்த முன்னாள் அமைச்சருக்கு விருதுநகர் நகரமன்ற உறுப்பினர் திரு.சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.