ஜனவரி-29 தலைநகர் சென்னையில் கொண்டாடப்படவுள்ள முப்பெரும்விழா பணியினை கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நல்லட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாசநாயக்கனூர் கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர்கள் இராஜேந்திரன், களத்துவீடு சதீஷ்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் கணேசன், துணைச்செயலாளர் சுரேஷ்குமார், இளைஞரணி செயலாளர் குணசேகரன், பொன்னாபுரம் புஷ்பராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.

உறவுகளை இல்லம்தேடி சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் கனமழை பெய்யத் தொடங்கியது, ஆனால் மழையையும் பொருட்படுத்தாத சமுதாய உறவுகள், குடைபிடித்தபடி நிர்வாகிகள் இருக்கும் இடம் தேடி வந்து நிதியுதவி அளித்தனர். உறவுகளின் அன்பும், எழுச்சியும் கோவை மாவட்ட சமுதாய மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.