தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
சமூகநீதி மாநாட்டிற்கு 4.5 லட்சம் கம்பளத்தாரின் பங்களிப்பு!

சமூகநீதி மாநாட்டிற்கு 4.5 லட்சம் கம்பளத்தாரின் பங்களிப்பு!

Radheyan 24 Aug 2022 | 01:32 AM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 261 சமூகங்களின் "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் மதுரையில் நடைபெற்ற சமூகநீதி மாநாடு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அரசியல் கட்சிகள், பத்திரிக்கைகளின் கவனத்தை ஈர்த்த சமூகநீதி மாநாட்டிற்கு மக்கள் அளித்த ஆதரவை புரிந்து கொண்ட நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் அடுத்த சில நாட்களிலேயே "சாதிவாரி கணக்கெடுப்பு" நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


இந்த மாநாட்டில் தொட்டிய நாயக்கர் சமூகம் பெரிய அளவில் பங்களிப்பு செய்துள்ளது. மாநாட்டிற்கான சுவர் விளம்பரம், நோட்டீஸ் விநியோகம், வாகன பிரச்சாரம், மாநாட்டு விளக்க கருத்தரங்கம், மாநாட்டு மலர் தயாரிப்பு, மாநாட்டு நிதி பங்களிப்பு, மாநாட்டு ஏற்பாடுகள் என அனைத்துவிதமான பணிகளிலும் தன் பங்களிப்பை செவ்வனே செய்துமுடித்துள்ளது.



இம்மாநாட்டிற்காக தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் 4.45 லட்சம் பொதுமக்களிடமிருந்து திரட்டி வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டு வரவு செலவை கையாண்ட நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள பட்டியல் படி மாநாட்டு நிதியாக கம்பளத்தார் சார்பில் தனியாக ஒரு லட்சமும்,  மாநாட்டு மலருக்காக ரூபாய் 2.71 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


இதுதவி, மாநாட்டில் இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டோர் தங்கள் சொந்தக்காசை செலவு செய்து 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகநீதி மாநாட்டிற்கு நிதியளித்த அனைத்து கம்பளத்து உறவுகளுக்கும், விளம்பர உதவி செய்தமைக்கும், பங்கெடுத்துக்கொண்ட அமைப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Madurai Conference thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண