தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
அணியணியாய் ஆர்வமுடன் குவியும் பெண்கள்!

அணியணியாய் ஆர்வமுடன் குவியும் பெண்கள்!

Radheyan 07 Aug 2022 | 01:23 PM
பகிர்:

இன்று மாலை 3 மணியளவில் மதுரை விமானநிலையம் அருகே நடைபெறவுள்ள சமூகநீதி மாநாட்டிற்கு நேற்று மாலை முதலே பெண்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புறப்பட்டனர். 

மத்திய, மாநில அரசுகளை சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி வலியுறுத்தி நடைபெறும் இம்மாநாட்டில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 262 சாதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். 


இம்மாநாட்டிற்கான பணிகளை கடந்த ஒருவாரமாக தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவரும், சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பெ.இராமராஜ் மதுரையில் முகாமிட்டு ஒருங்கிணைத்து வந்தார். நேற்று காலையில் இருந்தே நூற்றுக்கணக்கான சமுதாய தலைவர்கள் மாநாட்டுப்பந்தலில் திரண்டு இறுதிகட்டப்பணிகளை பார்வையிட்டு,  கூட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

தொட்டியநாயக்கர் சமுதாயத்தின் சார்பில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் இராதாகிருஷ்ணன்  தலைமையிலான குழுவினர் நேற்று மாலை மாநாட்டு திடலை பார்வையிட்டு,  ஒருங்கிணைப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


அதேபோல் நேற்று மாலையே பிரமலைக்கள்ளர் சமுதாய மகளிர் அணியினரும் மாநாட்டு திடலை வந்தடைந்தனர். சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் இருந்து முத்தரையர்,  முக்குலத்தோர், வீரசைவர் சமுதாய பெண்களும், கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, கோலை போன்ற மாவட்டங்களில் இருந்து தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர், கொங்கு செட்டியார் உள்ளிட்ட பெண்களும் பேருந்துகளில் இன்று காலையே மதுரையை வந்தடைந்ததை அடுத்து சமூகநீதி மாநாடு களைகட்டியுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Madurai conference thottianaicker.com thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண