மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணைச்செயலாளராக மதுரையை சேர்ந்த திரு.பூப்பாண்டி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடையங்குளம் கிராமத்தில் பிறந்தவர். மதுரை யாதவ கல்லூரியில் இளங்கலைபட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திரு.பூப்பாண்டி 2011 ஆம் ஆண்டு முதல் மதிமுக-வில் இருந்து வருகிறார். மதுரை மேற்கு ஒன்றிய செயலாளராகவும், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் இளைஞரணி செயலாளராக உள்ள திரு.பூப்பாணிடிக்கு, P.அனிதா என்ற மனைவியும், P.அக்க்ஷரா என்ற மகளும், P.கிருத்திக் என்ற மகனும் உள்ளனர். மாநில இளைஞரணி துணை செயலாளராக் நியமனம் செய்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், தலைமை கழக செயலாளர் துரை வைகோ அவர்களுக்கும் இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். திரு.பூப்பாண்டி அவர்கள் இப்பதவியில் சிறப்பாக பணியாற்றி மேலும் பல உயரிய பெறுப்புகளை பெற்றிட வாழ்த்துகிறோம்.
விளம்பரங்கள்
மாநில துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார் மதுரை.பூப்பாண்டி! பணிசிறக்க வாழ்த்துகள்!
Radheyan
02 Jul 2022 | 06:04 PM
குறிச்சொற்கள்