தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
சமுதாய தொண்டாற்றிய ஜமீன்தாருக்கு நினைவஞ்சலி! விடுதலைக்களம் அழைப்பு

சமுதாய தொண்டாற்றிய ஜமீன்தாருக்கு நினைவஞ்சலி! விடுதலைக்களம் அழைப்பு

Radheyan 14 Apr 2022 | 02:09 AM
பகிர்:

பேரையூர் ஜமீன்தாரரும் , தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், வீரபாண்டிய கட்டபொம்மன் இதழின் முன்னாள் ஆசிரியரும், தன் வாழ்நாள் இறுதிவரை சமுதாய தொண்டாற்றியவருமான அமரர்.மு.பரதபாண்டியன் அவர்களின் நினைவுநாளையொட்டி வரும் வெள்ளிக்கிழமை (15.04.2022)காலை 10.00 மணி அளவில் நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்திலுள்ள விடுதலைக்களம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் அன்னாரின் திருவூவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

செல்வந்தராய் பிறந்து சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை தொடர்ந்து இயக்க நிலையில் வைத்திருந்தவர் ஜமீன்தார் மு.பரதபாண்டியனார். அந்னாரின் நினைவுநாளில் அவரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் வென்றெடுக்க சமுதாய நலனில் அக்கறையுள்ளவர்கள் உறுதி ஏற்போம். ஏப்ரல்'15-இல் நடைபெறும் நினைவஞ்சலி கூட்டத்தில் அன்னாருக்கு புகழ்சேர்க்க வாருங்கள் என்று நிறுவன தலைவர் கொ.நாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mu.Bharathapandian thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண