தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மீண்டும் தொடங்கியது DNT சமுதாயத்தினரின் போராட்டம்!

மீண்டும் தொடங்கியது DNT சமுதாயத்தினரின் போராட்டம்!

நிருபர் 29 Jun 2021 | 12:09 AM
பகிர்:
DNT-ஒற்றைச்சான்றிதழ், மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி 68-சமுதாயங்களை உள்ளடக்கிய சீர்மரபின சமுதாய மக்கள் பலவருடங்களாக போராடி வருகின்றனர். இதற்கிடையே 116 சாதிகளைக் கொண்ட எம்.பி.சி. 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், ஒரு சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிய எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு 115 சமூகங்களுக்கு அநீதி அளித்துச்சென்றது. இதனையடுத்து புதிதாகப்பொறுப்பேற்றுள்ள திமுக அரசுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை நிறைவேற்றக்கோரி பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதை முறியடிக்கும் பொருட்டு, தங்கள் தரப்பு நியாயத்தை முதல்வரிடம் விளக்கிக்கூற  நேரம் ஒதுக்கக்கோரி 115 சமுதாய பிரதிநிதிகள் கடிதம் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே தமிழக அரசு அழுத்தத்திற்கு பணிந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தேர்தல் பிரச்சாரத்திண்பொழுது தமிழக முதல்வர் அளித்த "ஒற்றைச்சான்றிதழ்" வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும், தேனியில் மாவட்ட ஆட்சியர் முன் 115 சமுதாய மக்களின் சார்பில் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் சீர்மரபினர் நல்ச்சங்கத்தின் மாநில செயலாளர் திரு.சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு dnt thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண