Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் த.வீ.க.ப.கழகம் புகார் மனு.

சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் த.வீ.க.ப.கழகம் புகார் மனு.

Senthilkumar 20 Jul 2020 | 11:07 PM
பகிர்:

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைமையின் அறிவுறுத்தலின்படி, இந்திய சுதந்திரத்திற்கு முதல் வீரமுழக்கமிட்ட  மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் புகழை களங்கப்படுத்தும் விதமாக, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பும் போலி தமிழ் தேசியவாதிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்  த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளிடமும் இன்று (20.07.2020) புகார் மனு அளிக்கப்பட்டது.


அதன்படி இன்று விருதுநகர் மாவட்டத்தில் மாநிலத் தலைவர் நல்லாசிரியர் திரு. M. சங்கரவேலு அவர்கள் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடத்தில் மனு அளிக்கப்பட்டது. அப்பொழுது த.வீ.க.பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் மாநில அமைப்புச் செயலாளர் கோட்டைப்பட்டி திரு.சுப்புராஜ்,மாவட்ட தலைவர் மல்லாங்கிணறு திரு.குருசாமி, மாவட்ட பொருளாளர் நாகம்பட்டி திரு.குணசேகரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் காத்தான்பட்டி திரு. கணேசமூர்த்தி, திருச்சுழி  ஒன்றிய இளைஞரணி செயலாளர் குல்லம்பட்டி திரு.மல்ராஜ் மற்றும் பலர்  உடனிருந்தனர்.

தகவல் உதவி,

காத்தான்பட்டி.திரு.கணேசமூர்த்தி,                                                                                                                                              மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்,                                                                     த.வீ.க.பண்பாட்டுக்கழகம்.                                                                                                                                                                

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kaththaanpatti-Ganeshamoorthy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண