கோவை: கோவை புறநகர் மத்திய மாவட்டம், மதுக்கரை ஒன்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள திரு. து. சிவசாமி அவர்களை, அக்கட்சியின் கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், தங்களது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.
கோவை மாசேகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த திரு. து. சிவசாமி அவர்களை, கோவை புறநகர் மத்திய மாவட்டம், மதுக்கரை ஒன்றிய அதிமுக செயலாளராக நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி க. பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமியை நேரில் சந்தித்த சிவசாமி, நியமனத்திற்காக நன்றி தெரிவித்தார்.
இந்த நியமனத்தைத் தொடர்ந்து, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமூகத் தலைவர்கள் சிவசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, மாசேகவுண்டன்பாளையத்தில் உள்ள சிவசாமி அவர்களின் இல்லத்தில், வழுக்குப்பாறை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து, புதிய பொறுப்பிற்கு வாழ்த்து தெரிவித்து, தங்களது முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தனர்.