Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
குரூப் தேர்வில் வெற்றிபெற்ற கெங்கையன் வனக்காவலராக பணி நியமனம்!

குரூப் தேர்வில் வெற்றிபெற்ற கெங்கையன் வனக்காவலராக பணி நியமனம்!

Radheyan 28 Jul 2025 | 04:34 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எம்.கெங்கையன் குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்றதையடுத்து வனக் காவலர் (Forest Gaurd) பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சமுதாயத் தலைவர்கள் கெங்கையனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,

விருதுநகர் மாவட்டம், கத்தாளம்பட்டி கிராத்தைச் சேர்ந்த பொன்.முத்துராம் - பொன்.அய்யரக்காள் தம்பதியினரின் மகன் எம்.கெங்கையன். கணிதவியலில் முதுகலை ( M.Sc.,) பட்டம் பெற்ற கெங்கையன் இளங்கலை கல்வியியல் (B.Ed.,) பட்டமும் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக குரூப் தேர்வுகளுக்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து கடந்தாண்டு (2024) தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய குரூப்4 தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து கடந்த மாதம் சான்றிதழ் சரிபார்ப்புப்பணிகள் நிறைவுபெற்று கெங்கையன் வனக் காவலர் (Forest Gaurd) ஆக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் தேனி மாவட்ட வனத்துறையின்கீழ் ஸ்ரீவில்லிப்புத்தூர் - மேகமலை வனச்சரகத்தில் கடந்த மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

குரூப்4 தேர்வில் வெற்றிபெற்று வனக் காவலராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள கெங்கையனுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு gengaian thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண