Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
முதலில் எதைச்சாப்பிடுகிறோம் என்பதில் தான் சர்க்கரை முடிவாகிறது!

முதலில் எதைச்சாப்பிடுகிறோம் என்பதில் தான் சர்க்கரை முடிவாகிறது!

Radheyan 10 Mar 2025 | 04:55 PM
பகிர்:

இரத்தத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) அளவு அதிகமாக இருந்தால் அது சர்க்கரை வியாதி எனப்படும். சர்க்கரை வியாதி இல்லாதவர்களுக்கு சாப்பிடும் முன் (காலை வெறும் வயிற்றில்/ காலியான வயிற்றில்) சர்க்கரை அளவு 70 முதல் 100 மில்லிவரையிலும், சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்து 140 மில்லிக்குள் இருக்கவேண்டும். சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 126 மில்லிக்கு மேல், சாப்பிட்டபின் 2 மணிநேரம் அழித்து 200 மில்லிக்குமேல் இருந்தால் சர்க்கரை வியாதி உள்ளது என்று கண்டறியப்படும். சர்க்கரை உள்ளவர்களுக்கு இந்த விவரம் புதிதல்ல. ஆனால், உணவில் எதை முதலில் சாப்பிடுகிறோம்  என்பதைப்பொறுத்து உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவுகளை தீர்மானிக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இது சர்க்கரை உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் பயனளிக்கக்கூடிய செய்தி.

அதாவது, நாம் முதலில் உண்பது கார்போஹைட்ரேட்டா? (மாவுச்சத்து), புரதமா?, நார்ச்சத்தா? ஏன்பதும், அதற்கான இடைவெளி என்ன எனும் நேரக்கணக்கும் மிக முக்கியம் என்கிறது ஆய்வு.

அமெரிக்க டயபடிஸ் அச்சோசியேசன் சார்பில் நடந்த ஆய்வு ஒன்றில், பங்கேற்பாளர்களுக்கு காலை உணவாக முதலில் ரொட்டி (கார்போஹைட்ரேட்) யும், ஆரஞ்சு ஜூஸ்ஸும் வழங்கப்பட்டது. அதன்பின் காய்கறிகளும், சிக்கனும் எடுத்தார்கள்.

உணவுக்கு பிந்தைய சராசரி சர்க்கரை அளவுகள் பின்வருமாறு

30 நிமிடம் கழித்து: 156  Mg/DL

60 நிமிடம் கழித்து: 199 Mg/DL

120 நிமிடம் கழித்து: 169 Mg/DL

அதே பங்கேற்பாளர்களுக்கு ஒருவாரம் கழித்து உணவின் ஆர்டர் மாற்றப்பட்டது. அதன்படி முதலில் சிக்கன் (புரதம்) காய்கறியும், 15 நிமிடம் கழித்து ரொட்டியும் (கார்போஹைட்ரேட்), ஆரஞ்சு ஜூஸும் வழகப்பட்டது.

உணவுக்கு பிந்தைய சராசரி ரத்த சர்க்கரை அளவுகள் பின்வருமாறு,

30 நிமிடம் கழித்து: 112  Mg/DL

60 நிமிடம் கழித்து: 125 Mg/DL

120 நிமிடம் கழித்து: 140 Mg/DL

ஆகவே, உணவில் எதை முதலில் எடுக்கிறோம் என்பதே நம் உணவுக்கு பிந்தைய ரத்த சர்க்கரை அளவுகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நிரூபனமாகிறது.


உணவுக்கு பிந்தைய சர்க்கரை அளவுகளை குறைவாக வைத்திருப்பது சுகர் கிராஷ் ஆகாமல் இருப்பது, உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்கக்ரை வியாதி உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு மிக நல்ல தீர்வாகும். உணவுக்கு பின் ஒரு 30 முதல் 45 நிமிடம் நடப்பதும் ரத்த சர்க்கரை அளவுகளை இன்னும் கட்டுக்குள் வைக்க உதவும்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு sugar thottinaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண