தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
போடிநாயக்கனூரில் எழுந்தருளியுள்ள அன்னை வீரசக்கதேவி ஆலய திருக்குடமுழுக்கு!

போடிநாயக்கனூரில் எழுந்தருளியுள்ள அன்னை வீரசக்கதேவி ஆலய திருக்குடமுழுக்கு!

Radheyan 21 Apr 2024 | 01:34 AM
பகிர்:

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், கீச்சொக்கநாதபுரம் கிராமத்தில் இராஜகம்பளத்தார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு வீரஜக்கம்மாள் திருக்கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நாளை மறுநாள் சித்திரை மாதம் 9ஆம் தேதி (22-04-2024) திங்கட்கிழமை காலை 8:30  மணி முதல் 10:10  மணி வரை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.  

சிவனடியார்கள் சர்வசாதகம் சண்முகம் - வைத்தியநாதசிவம் ஆகியோர் தலைமையேற்று நடத்தி வைக்கும் மஹாகுபாபிஷேகத்தின் முதல் நிகழ்ச்சியாக இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, புண்யாக வாஜகம், இடசுத்தி ஆகியவை நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாபூர்ணஹீதி, தீபாரதனை நடைபெறவுள்ளது.


இதன் தொடர்ச்சியாக மாலை புண்யாகவாஜனம் , எஜமான சங்கல்பம், கலாகர்சனம், யாகசால பிரவேசம், துவார சக்தி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

மீண்டும் திங்கள் காலை 7 மணியளவில் கணபதி பூஜை, துவாரசக்தி பூஜை, லட்சுமி பூஜை நிகழ்ச்சியுடன் துவங்கி கோபூஜை, மூலமந்திர ஜபம், யாத்ரா தானம், தீபாரதனை முடிந்து 9.50 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து மூலஸ்தான மகாஅபிஷேகம், தீபாரதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. 


இறுதியாக காலை 11 மணியளவில் அன்னதான நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம நாட்டாமை தலைமையில் இராஜகம்பளத்தார் சமுதாய விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். வீரஜக்கதேவி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு அன்னையின் அருள்பெறுமாறு சமுதாய உறவுகளுக்கு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Veerasakkadevi thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண