தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
ஊழல் பூதங்கள் அணிவகுப்பு ஆரம்பம் - இறந்தவர்கள் கேட்கும் இன்சூரன்ஸ்

ஊழல் பூதங்கள் அணிவகுப்பு ஆரம்பம் - இறந்தவர்கள் கேட்கும் இன்சூரன்ஸ்

Radheyan 17 Aug 2023 | 11:44 PM
பகிர்:

சிஏஜி அறிக்கை என்றால் நாட்டில் அனைவருக்கும் பரிட்சியமானது. 2003-2004 ஆண்டில் வெளியான சிஏஜி அறிக்கையில் 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கறி ஊழல் என பல துறைகளில் பல லட்சக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறியது மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியது. அதற்கு பிறகு பொறுப்பேற்றுக்கொண்ட மோடி தலைமையிலான பிஜேபி அரசு ஊழல் கறைபடியாத அரசு என்று அனைத்து தளங்களிலும் பறைசாற்றி வந்தது. ஆனால் தற்போது வெளியாகிவரும் சிஏஜி அறிக்கையின் மூலம் பல ஊழல்கள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. பாரத் மாலா, டெல்லி-கூர்கான் 14 வழிச்சாலை, ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது டெல்லி அரசியலை பரபரப்பாக்கியுள்ளது. இதன் விவரம் வருமாறு,

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் இரண்டு கூறுகளில் ஒன்றான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) மதிப்பீட்டின் மீதான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அறிக்கையில், இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 24.42 கோடி பயனாளர்களில் கிட்டத்தட்ட 7.5 லட்சம் பயனாளிகள் 9999999999 என்ற ஒரே மொபைல் எண்ணுடனும், மேலும் 1.4 லட்சம் பேர் '8888888888' எண்ணிலும் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளது. 

இந்தத் திட்டத்தின் பயனாளிகள் அடையாள அமைப்பில் (பிஐஎஸ்) சேமிக்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கை, பயனாளிகளை அடையாளம் காண்பதில் உள்ள முறைகேடுகளை எடுத்துக்காட்டியுள்ளது. இன்றுவரை இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்களின் மருத்துவ செலவிற்காக ரூ.67,456.21 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

இன்சூரன்ஸ் க்ளெய்ம் செட்டில்மென்ட்டில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக தணிக்கையாளர்கள் கண்டறிந்தனர். திட்டத்தின் கீழ் எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகளுக்கு உரிமைகோரல்களை வெளியிடுவதற்கு முன்பு SHA (State Health Administrators) களால் போதுமான சரிபார்ப்பு செய்யப்படவில்லை என்று அது தெரிவித்தது. 2.25 லட்சம் வழக்குகளில், 'அறுவைசிகிச்சை' செய்யப்பட்ட தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியை விட தாமதமாக காட்டப்பட்டுள்ளது என்று அது குறிப்பிட்டது. இதுபோன்ற அனைத்து வழக்குகளிலும், 1.79 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் மகாராஷ்டிராவில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளன, இதற்காக கோரப்பட்ட தொகை ரூ. 300 கோடிக்கு மேல். 

இது தவிர, மருத்துவமனைகள் இன்சூரன்ஸ் தொகை கேட்டு முறையாக விண்ணப்பிக்கும் முன்பே அவர்களுக்கு பணப்பட்டுவாட செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு "குழந்தை மருத்துவ சிறப்பு தொகுப்புகள்" கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. 45,846 உரிமைகோரல்களில் (க்ளைய்ம்), சேர்க்கை தேதியை விட டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதி முந்தையதாக இருந்துள்ளது. மேலும், ஒரு நோயாளி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பல மருத்துவமனைகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் காட்டப்பட்ட பல நிகழ்வுகளை தணிக்கை கண்டறிந்துள்ளது. 'இறந்தவர்கள்' எனக் காட்டப்பட்ட சிலருக்கு எதிராக லட்சக்கணக்கான உரிமைகோரல்கள் நடைபெற்றுள்ளதையும் தணிக்கை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

குஜராத், மத்தியப் பிரதேசம், மேகாலயா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற மோசடி புகார்கள் அதிக அளவில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு PMJAY thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண