தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
ரயில்களிலும் வெளிநாடு செல்லலாம் - எந்தெந்த ரயில் நிலையங்களில் இருந்து தெரியுமா?

ரயில்களிலும் வெளிநாடு செல்லலாம் - எந்தெந்த ரயில் நிலையங்களில் இருந்து தெரியுமா?

Radheyan 15 Jun 2023 | 01:58 AM
பகிர்:

இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தங்களுக்கு தெரியுமா?

பொதுவாக வெளிநாடு செல்வதற்கு விமானம் மூலம் தான் செல்ல வேண்டும். ஆனால், ரயில் மூலமும் செல்லலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஹல்டிபாரி:

ஹல்டிபாரி (Haldibari) ரயில் நிலையம் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது. புதிய ஜல்பைகுரி நிலையத்தின் மற்றொரு நிலையமாக இந்த ரயில் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து வங்கதேசத்திற்கு வெறும் 4.5 கி.மீ தூரம் தான். இங்கிருந்து எளிதாக வங்கதேசத்திற்குச் செல்லலாம்.

ஜெய்நகர் ரயில் நிலையம்:

ஜெய்நகர் ரயில் நிலையம் (Jaynagar station) பீகார் மாநிலம் மதுபானியில் அமைந்துள்ளது. இங்கிருந்து நேபாளத்திற்கு ரயில் செல்கிறது. இப்பகுதி மக்கள் அதிகளவில் நேபால் செல்ல இந்த ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் ரயிலைத் தான் பயன்படுத்துகின்றனர்.

பெட்ராபோல்:

பெட்ராபோல் (Petrapole) ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு எளிதாகச் செல்லலாம். இந்த ரயில் நிலையம் முதன்மையாக இரண்டு நாடுகளுக்கு இடையே சரக்கு ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சிங்காபாத்:

சிங்காபாத் (Singhabad) ரயில் நிலையம், மேற்கு வங்காளத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து வங்கதேசத்திற்கு ரோகன்பூர் வழியாக ரயில் செல்கிறது.

ஜோக்பானி:

ஜோக்பானி (Jogbani) ரயில் நிலையம் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து நேபாளத்துக்கு ரயில் செல்கிறது. மேலும் ரயில் மூலம் மட்டும் அல்ல இங்கிருந்து நடந்தே கூட நேபாளத்துக்கு செல்லலாம்.

ராதிகாபூர்:

ராதிகாபூர் (Radhikapur) ரயில் நிலையம் சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயில் நிலையம் ஜீரோ பாயின்ட் ரயில் நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் செல்கின்றன.

அட்டாரி ரயில் நிலையம்:

அட்டாரி ரயில் நிலையம் ( Attari Station) மிகவும் பிரபலமானது. இது பஞ்சாபில் அமைந்துள்ளது. வடக்கு ரயில்வேயில் கீழ் இந்த நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் பாகிஸ்தானுக்குச் செல்கிறது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த ரயில் மூலம் பாகிஸ்தானுக்குச் செல்லலாம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு railway station thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண