அன்பானவர்களே, கொரோனா-விலிருந்து மனித குலத்தைக்காக்க புராணங்களில் சொல்லப்படும் எந்த தெய்வமும் அவதாரம் எடுத்துவரவில்லை, இறைதூதரும் வரவில்லை, இரட்சிக்கும் ரட்சகரும் வரவில்லை. நம் கண்முன் இருக்கும் ஒரே தெய்வங்கள் நம் மருத்துவர்களே. தெய்வமாக வணங்கப்பட வேண்டியவர்கள் மரணத்திற்குப்பின் புதைக்கப்படக் கூட அனுமதிக்காத கூட்டங்கள் “கொரோனா”வைவிட வேகமாகவும், கொடிய விஷமாகவும் பரவத்துவங்கி விட்டது. இதுவரை சர்வாதிகாரிகள் கூட மனிதகூட்டத்தைத்தான் கொன்று குவித்துள்ளனர். ஆனால் மனித வரலாற்றில் முதல் முறையாக மனிதர்கள் கூட்டமாக கூடி பிணத்தை எதிர்க்கின்றான், அதுவும் கற்றரிந்த தமிழ்நாட்டில் நடப்பது வேதனையானது மட்டுமல்ல வெட்கக்கேடானது. வாருங்கள் மருத்துவர்களைக் காப்போம்….கொரோனாவின் பிடியிலிருந்து மனித குலத்தை மீட்போம். இப்பாடலை இயற்றியுள்ளார் நமது சொந்தம், Dr.ரமேஷ் அவர்கள்,வேலன் மருத்துவமனை, திருப்பூர்.
விளம்பரங்கள்
“மருத்துவ கீதம்” இயற்றியவர் - திருப்பூர்.Dr.ரமேஷ், வேலன் மருத்துவமனை
குறிச்சொற்கள்