ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் வேங்கடகிரியில் நமது சமுதாய சொந்தங்கள் 400 குடும்பங்களுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு தொழிலாளர்களாக பணிபுரியும் நமது சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, நெல்லூரில் கம்பளத்தார்களின் மூத்த முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் சமுதாயத் தலைவர் திரு.கோட்டைச்சாமி அவர்கள் அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பத்து பொருட்களை வழங்கினார். வேங்கடகிரியில் விநியோக பொறுப்பை ஏற்றுக் கொண்டு திரு.P.பிரபாகரன், திரு.P.முனிஷ்வரன், திரு.J.பெருமாள் ஆகியோர் வழங்கினர்.
விளம்பரங்கள்
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இராஜ கம்பளத்தார்க்கு கோரானோ நிவாரண உதவி
Senthilkumar
28 May 2020 | 10:24 PM
குறிச்சொற்கள்