தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
பாஜக ஒன்றிய தலைவராக கம்பளத்தார் நியமனம்!

பாஜக ஒன்றிய தலைவராக கம்பளத்தார் நியமனம்!

Radheyan 26 May 2022 | 02:01 PM
பகிர்:

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அகில இந்திய கட்சியான பாஜகவில் விவசாயம், கலை, ஓபிசி, வர்த்தகம் என பல பிரிவுகள் உள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் தலைவராக ஒருவரும்,  பொதுச்செயலாளர், செயலாளர், துணைச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நான்கு முதல் 12 பேர் வரை நியமிக்கப்படுகின்றனர். இதன் நோக்கம் சமூகத்திலுள்ள அனைத்து சாதியினருக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் அளிப்பதும் அரசியல் மயப்படுத்துவதும் என்று விளக்கமளிக்கின்றனர் பிஜேபி தலைவர்கள். 

அந்தவகையில் திராவிடக்கட்சிகளில் பெரும்பான்மை சாதியினரே அனைத்து அதிகாரங்களையும், பதிவிகளையும் அனுபவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. 

இதற்குமாறாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டு வரும் பிஜேபி நிர்வாகிகள் பட்டியலில் எல்லா சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்துள்ளனர். தொட்டிய நாயக்கர் சமூகத்தை பொறுத்தவரை சில தினங்களுக்கு முன் விவசாய அணியின் மாநிலச்செயலாளராக இராஜேஷ் குருசாமி நியமிக்கப்பட்டிருந்தார். 

இதன்தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றிய பிஜேபி தலைவராக சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்றத்தலைவரும் வழக்கறிஞருமான K.இராம்குமார் M.A.B.L., நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒன்றிய தலைவராக கம்பளத்தாருக்கு வாய்ப்பு வழங்கிய மாநில தலைவர் அண்ணமலை அவர்களுக்கும், பிஜேபி முன்னனி தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ramkumar thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண