தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெவுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர், நகரமன்ற, பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட கம்பளத்தார் சமுதாயத்தினர் திமுக,அதிமுக, பாஜக,போன்ற கட்சிகளின் வேட்பாளராக போட்டியிகுகின்றனர்.

இவர்கள் அனைவரும் தங்களின் வெற்றிக்காக கடந்த இரு வாரங்களாக தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களின் அரசியல் எதிர்காலம் வரும் சனிக்கிழமையன்று தீர்மானிக்கப்பட உள்ளது. சமுதாய மக்கள் அனைவரும் கட்சி, மன மாட்சரியங்களை மறந்து நமது வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்மிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.