தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
உள்ளாட்சியில் நல்லாட்சி நாயகி தமிழரசி தனக்கோடி!

உள்ளாட்சியில் நல்லாட்சி நாயகி தமிழரசி தனக்கோடி!

Radheyan 13 Aug 2021 | 04:13 PM
பகிர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி பெரிய வளையப்பட்டி  ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.இளங்கோ, இரா.மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் ந.மணிகண்டன் அவர்களோடு இணைந்து, சமீபத்தில் முதல்வர் அறிவித்த இத்திட்டத்தை உடனடியாக தங்கள் ஊராட்சிக்கு தட்டிச்சென்றார் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.தமிழரசி தனக்கோடி

இத்திட்டத்தை புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சியில் தொடங்கிடவும், மேலும் பல நலத்திட்டங்களை கொண்டுவரவும்,  பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிடவும் ஊராட்சி மன்றத்தலைவர் தமிழரசி தனக்கோடிக்கு ஆதரவாக இருந்துவரும் ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மாள் குருசாமி, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் எம்.எஸ். மணியன் உள்ளிட்ட தலைவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mrs.Tamilarasi Dhanakodi Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண