தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
வக்கம்பாளையம் ஊர்ப்பண்ணாடி இல்ல திருமண வரவேற்புவிழா!

வக்கம்பாளையம் ஊர்ப்பண்ணாடி இல்ல திருமண வரவேற்புவிழா!

Radheyan 15 Aug 2023 | 11:59 PM
பகிர்:

கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், வக்கம்பாளையம் ஊர்ப்பண்ணாடி இல்ல திருமண வரவேற்புவிழா வரும் 23.08.2023 புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதன் விவரம் வருமாறு,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், கொக்கராயன் பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.நாகராஜ் அவர்களின் அன்புமகன் என்.பிரபாகரன் B.E., க்கும் கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், வக்கம்பாளையம் ஊர்ப்பண்ணாடியும், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தை வளத்தெடுப்பதற்கு உறுதுணையாக இருந்த முன்னோடி தலைவர்களில் ஒருவருமான என்.முருகானந்தம் அவர்களின் அன்புமகள் எம்.விஷ்ணுபிரியா B.Tech ஆகியோரது திருமண வரவேற்புவிழா வரும் 28.08.2023 புதன்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை பொள்ளாச்சி - பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் அமைந்துள்ள விஜய் மஹாலில் நடைபெறவுள்ளது.


இத்திருமண வரவேற்புக்கான ஏற்பாடுகளை மணமக்களின் பெற்றோர்கள் செய்து வருகின்றனர். இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இளந்தளிர்களுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, அமைப்புச்செயலாளர் எம்.சரவணன், மனோகரன், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ், ஆலோசகர்கள் தொழிலதிபர் துரைசாமி மற்றும் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் (ஓய்வு) சுப்பையா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Reception thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண