கர்மவீரர் காமராஜரின் 119-ஆவது பிறந்தநாள் விழா நாடெங்கும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கம்பளத்தார் சமூகத்தின் சார்பில் விடுதலைக்களம் கட்சி, நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை சார்பிலும் கொண்டாடப்பட்டது. காமராஜர் பிறந்தநாளையொட்டி தேனியைச் சேர்ந்த பள்ளி மாணவன் மிதுன், காமராஜரின் இந்நாட்டிற்காற்றிய பணியைப் போற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகமெங்கும் பலகட்சிகளில் கம்பளத்தார் சமுதாய தலைவர்கள் அரசியல் கட்சிகளில் பணியாற்றி வந்தாலும், பேச்சாற்றல் மூலம் ஆளுமை செலுத்தும் தலைவர்கள் அரிதாகவே உள்ளனர். இது சமுதாயத்தை அரசியலில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தாமல் தேக்கமடையச்செய்ததில் முக்கியப்பங்குள்ளது. மாணவன் மிதுன் போன்று குழந்தைகளின் பேச்சுக்கலையை வளர்க்க சமுதாய அமைப்புகளும், பெற்றோர்களும் முன்வரவேண்டும்.
விளம்பரங்கள்
நீயாவது பேசும் குழந்தாய்! - இது பேசமறந்த சமுதாயம்!
Radheyan
16 Jul 2021 | 12:49 AM
குறிச்சொற்கள்