சமூகநீதிக் காவலர் மறைந்த பாரதப்பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு தொட்டிய நாயக்கர் மற்றும் சீர்மரபினர் நலச்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த சமூகநீதிக் கருத்தரங்கம் காணொளி வாயிலாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மூத்த பத்திரிக்கையாளர் திரு.அய்யநாதன் அவர்கள், எல்லா சமூகங்களையும் ஒன்றிணைத்து, தான் ஒரு மிகப்பெரிய சக்தி என காட்டிக்கொண்டு, தன் கட்சிக்கு மட்டும் தேர்தல் சீட்டு கேட்டு கூட்டணி பேரம் பேசுபவர், சொந்த சாதிக்கு மட்டும் இடஒதுக்கீடு கேட்டுப்பெறுபவர் எப்படி சமூகநீதிக்காவலர் என்று சொல்லிக்கொள்ள முடியும்? என்று பகிரங்க கேள்வியெழுப்பினார். அவர் பேச்சின் சாரம்சம் வீடியோவில்...
விளம்பரங்கள்
உள்ஒதுக்கீடு பெற்றவிதம் பலவீனத்தையே காட்டுகிறது! பத்திரிக்கையாளர் அய்யநாதன் தாக்கு!
Radheyan
28 Jun 2021 | 04:25 PM
குறிச்சொற்கள்