கடந்த (21.08.2021)சனிக்கிழமையன்று நடைபெற்ற ஓணம் திருவிழாவை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் விமர்சையாக கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக மலம்புழாவிலுள்ள ஹேமாம்பிகை பகவதியம்மன் கோவிலில் அறுவடைக்கு தயாராகியுள்ள நெற்கதிர்களை அம்மனுக்கு சமர்ப்பிக்கும் நிகழ்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த கம்பளத்தார்கள் ஊர்வலமாகச் சென்று படுவிமர்சையாக அம்மனுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக எளிய முறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கம்பளத்தார் சார்பில் திரு.ராஜன், திரு.செல்வன் ஆகியோர் அம்மனுக்கு சமர்ப்பித்தனர்.
விளம்பரங்கள்
கேரளாவில் கம்பளத்தார் கொண்டாடிய ஓணம் திருவிழா!
Radheyan
24 Aug 2021 | 07:26 PM
குறிச்சொற்கள்