Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக ராஜேஷ் குருசாமி நியமனம்!

தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக ராஜேஷ் குருசாமி நியமனம்!

Radheyan 22 Sep 2025 | 04:57 PM
பகிர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத் தலைவராக தொழிலதிபர் ராஜேஷ்குருசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு சமுதாயத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன்விவரம் பின்வருமாறு,

விருதுநகர் மாவட்டம் எரிச்சனத்தத்தைச் சேர்ந்தவர் இராஜேஷ் குருசாமி. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குரு குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் ராஜேஸ் குருசாமி நவீன் விவசாயி என்ற இதழையும் நடத்தி வருகிறார். தனது 18 வயது முதல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வரும் இராஜேஷ் குருசாமி, அவ்வியக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் முக்கிய காரிய கர்த்தாவாக இருந்துள்ளார். அதேபோல் பாரதிய ஜனதா கட்சியிலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். 


இந்நிலையில் தற்போது பாஜகவின் விவசாய அணி மாநிலச்செயலாராக இருந்துவரும் இராஜேஷ் குருசாமியை, அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலோடு பாஜக விவசாய அணியின் மாநில துணைத்தலைவராக நியமனம் செய்து விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக பாஜக துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இராஜேஷ்குருசாமிக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, தொட்டிய நாயக்கர் சமுதாய தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு raajesh gurusamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண