தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
புறக்கணிக்கப்படும் DNT-இட ஒதுக்கீடு பற்றி அறிந்துகொள்வோம்-பகுதி-4

புறக்கணிக்கப்படும் DNT-இட ஒதுக்கீடு பற்றி அறிந்துகொள்வோம்-பகுதி-4

Radheyan 04 May 2021 | 04:44 PM
பகிர்:

உறவினர்களுக்கு வீரவணக்கம்,

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் சரத்து 16.4-இல் கல்வி, சமூக ரீதியாக பின்தங்கிய மக்கள் அரசில் போதுமான அளவு இல்லாதபோது கண்டிப்பாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இருப்பினும் 1990ல் தான் மறைந்த பாரதபிரதமர் வி.பி.சிங்கின் சீரிய முயற்சியால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உயர் சாதியினர் கடும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் பலர் தீக்குளித்தனர். அவருடைய அரசு கவிழ்க்கப்பட்டது.

1991ல் ஆட்சிக்கு வந்த மறைந்த பாரதபிரதமர் நரசிம்மராவ் பொருளாதார அடிப்படையில் முன்னேறிய வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீட்டையும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டையும் செயல்படுத்தினார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு 1992ல் இந்திராசஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் பொருளாதார ரீதியாக முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்றும் சமூக கல்வி ரீதியாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிய 27% இடஒதுக்கீடு செல்லும் என்றும் ஆனால் சாதிவாரி இடஒதுக்கீடு 50% தாண்டக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது.

அது தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்தாக இருந்தது. இருப்பினும் அம்மா அரசு துரிதமாக செயல்பட்டு 1993ல் தனி சட்டம் இயற்றி அரசியல் அமைப்பு சட்டம் 9வது அட்டவணையில் சேர்த்து 69% இடஒதுக்கீட்டை பாதுகாத்தது.அது பல சட்டப்போராட்டங்களை கடந்து இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

பதிவு தொடரும்.

திரு.பி.கே. துரைமணி, (8610010230, 9443480852).

சீர்மரபினர் நலச்சங்கம்.

குறிச்சொற்கள்

கட்டுரைகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண