தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• TNPSC-ல் சாதனை! 4-ஆம் இடம் பிடித்து உதவி வேளாண்மை அலுவலரான சிவகுருநாதன்! • செல்போன், கணினியை இயக்கும் சிறிய Chip-க்கு இவ்வளவு தண்ணீர் தேவையா? • E20 vs EV: மக்களின் செலவா? நாட்டின் சேமிப்பா? இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் எந்தப் பாதையில்? • உலக பூர்வகுடிகள் தினம்: தொன்மையைப் போற்றுவோம்; பண்பாட்டைப் பாதுகாப்போம்! • திருப்பூர் TCH மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகள் நலப்பிரிவு தொடக்கம்! – டாக்டர் பொம்முசாமியின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் • TNPSC-ல் சாதனை! 4-ஆம் இடம் பிடித்து உதவி வேளாண்மை அலுவலரான சிவகுருநாதன்! • செல்போன், கணினியை இயக்கும் சிறிய Chip-க்கு இவ்வளவு தண்ணீர் தேவையா? • E20 vs EV: மக்களின் செலவா? நாட்டின் சேமிப்பா? இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் எந்தப் பாதையில்? • உலக பூர்வகுடிகள் தினம்: தொன்மையைப் போற்றுவோம்; பண்பாட்டைப் பாதுகாப்போம்! • திருப்பூர் TCH மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகள் நலப்பிரிவு தொடக்கம்! – டாக்டர் பொம்முசாமியின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்
விளம்பரங்கள்
TNPSC-ல் சாதனை! 4-ஆம் இடம் பிடித்து உதவி வேளாண்மை அலுவலரான சிவகுருநாதன்!

TNPSC-ல் சாதனை! 4-ஆம் இடம் பிடித்து உதவி வேளாண்மை அலுவலரான சிவகுருநாதன்!

Admin 11 Aug 2026 | 08:12 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதுச்சினையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த எம். நடராஜன் – திருமதி அழகேஷ்வரி தம்பதியினரின் மகன் என். சிவகுருநாதன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (Combined Technical Services – CTS) தேர்வில் சிறப்பிடம் பெற்று, வேளாண்மைத் துறையில் உதவி வேளாண்மை அலுவலர் (Assistant Agricultural Officer) பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வின் மூலம் தகுதியும் திறமையும் பெற்ற இளைஞர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.

அதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (Diploma/ITI Level) தேர்வில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த என். சிவகுருநாதன் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் திரு. எம். செல்வராஜ் அவர்களின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, 11.08.2026 அன்று நடைபெற்ற உடற்தகுதிச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வின் போது, வேளாண்மைத் துறையில் உதவி வேளாண்மை அலுவலர் (Assistant Agricultural Officer) பணிக்கு தரவரிசை எண் 4-ஆக சிவகுருநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான தற்காலிகத் தேர்வு நினைவுக் குறிப்பை (Memorandum) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவரிடம் வழங்கியுள்ளது.

TNPSC தேர்வில் தரவரிசை எண் 4 பெற்று, வேளாண்மைத் துறையில் அரசு பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள என். சிவகுருநாதனுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ. இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் முறையான தயாரிப்பின் மூலம் TNPSC தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ள சிவகுருநாதனின் சாதனை, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு பயிலும் இளைஞர்களுக்கு சிறந்த ஊக்கமாகவும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது. அவரது எதிர்காலப் பணிச் சிறப்புக்கும், பொதுச்சேவையில் சிறப்பாகப் பணியாற்றவும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு N Sivagurunathan TNPSC TNPSC Rank 4 Combined Technical Services உதவி வேளாண்மை அலுவலர் Assistant Agricultural Officer விளாத்திகுளம் புதுச்சினையாபுரம் அரசு பணிநியமனம்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண