தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
அதிமுக கவுன்சிலருக்கு சேவா ரத்னா விருது!

அதிமுக கவுன்சிலருக்கு சேவா ரத்னா விருது!

Radheyan 11 Aug 2025 | 10:49 PM
பகிர்:

விருதுநகர் நகரமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.சரவணன் அவர்களின் பொதுநலச்சேவைக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதன் விவரம் வருமாறு,

விருதுநகர் அதிமுக பிரமுகரும், நகர மன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.சரவணன் மிகச்சிறந்த சமூக செயற்பாட்டாளர். நகர மன்ற உறுப்பினராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். ஆளும்கட்சி எதிர்க்கட்சி என எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தன்பகுதி மக்களுக்கான திட்டத்தைக் கொண்டுவந்து செயல்படுத்துவதில் கெட்டிக்காரர் என அனைத்து தரப்பினராலும் பாரட்டப்படுபவர் ஆர்.எஸ்.சரவணன். இவரின் தொடர்ச்சியான மக்கள் சேவையை புலனாய்வு மூலம் ஆய்ந்தறிருந்து காலைப்பதிப்பகம், போலீஸ் ரிப்போர்ட்டர் இதழ்களின் சார்பில் "சேவா ரத்னா" விருதுக்கு பரிந்துரை செய்தன. இதனை ஏற்றுக்கொண்ட விருது வழங்கும் நிறுவனமான 'குளோபல் அச்சீவர்ஸ்" ஆர்.எஸ்.கண்ணனைத் தேர்வு செய்து சென்னை அண்ணாசாலையிலுள்ள தனியார் ஐந்துநட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் விருது வழங்கி கௌரவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.08.2025) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சினிமா இயக்குநர்கள், சின்னத்திரை நடிகர், நடிகையர், பிரபல தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தினர். நாடெங்கிழுமிருந்து பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட இவ்விருதுக்காக விருதுநகர் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே அரசியல் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு R.S.Kannan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண