Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
மறைந்தார் மாமனிதர் செக்கன்னம் ஊர் நாயக்கர் K.குப்பமுத்து நாயக்கர் - விடுதலைக்களத்தின் வீரவணக்கம்.

மறைந்தார் மாமனிதர் செக்கன்னம் ஊர் நாயக்கர் K.குப்பமுத்து நாயக்கர் - விடுதலைக்களத்தின் வீரவணக்கம்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியம், செக்கன்னம் ஊர் நாயக்கரும், வையம்பட்டி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவரும், த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின்  மாநில துணைத்தலைவருமான திரு.K. குப்பமுத்து நாயக்கர் அவர்கள் இன்று (10.08.2020) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். சிறந்த பண்பாளர், சமுதாய பற்றாளர், புகழ்பெற்ற  வீரப்பூர் கோவிலின் முக்கிய காரியதரிசியாக திகழ்ந்தவர் திரு.குப்பமுத்து நாயக்கர் அவர்கள்.


விடுதலைக்களம் அமைப்பை துவங்கிய ஆரம்பநிலையில் மரியாதைக்குரிய கடவூர் ஜமீன்தாரிடம் என்னை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திய பேருள்ளம் பெற்றவர். அவர் ஊரின் மாலை தாண்டுதல் நிகழ்வுக்கு இந்த எளியவனை சிறப்பு அழைப்பாராக அழைத்து சிறப்பு செய்தவர் பெருந்தனக்காரர். அன்னாரின் ஒவ்வொரு சொல்லிலும்,செயலிலும் கண்ணியம் காத்திட்ட பெருமகனார். சமுதாயத்திற்கு கிடைத்திட்ட அரிய பொக்கிஷம். விடுதலைக்களம் சார்பில் நிகழ்ச்சிக்கு அழைத்தபோதெல்லாம் வந்திருந்து கொடியேற்றி சிறப்பித்த மாமனிதர்.

வார்த்தைகளில் அடக்கமுடியாத பண்புநலன்களுக்கு சொந்தக்காரர் மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொனா துயர்கொண்டேன். அவரது மறைவு குடும்பத்தினருக்கும், சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் விடுதலைக்களம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன்,அன்னாரின் ஆன்மா இறைவன் மடியில் துயில்கொள்ள விடுதலைக்களத்தின் சார்பில் பிராத்திக்கின்றோம்.


இவண்,                                                                                                                                                                                                                                                                                                                                                கொ .நாகராஜன் 

நிறுவன தலைவர், விடுதலைக்களம்

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Sekkanam-K.Kuppamuthu Nayakkar

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண