நாயக்கர் - நாயுடு சமுதாய மன்னர்களையும், மக்களையும் அவமதிக்கும் வண்ணமும், மிரட்டும் தொனியிலும் சமூக ஊடகங்களில் சிலவிஷமிகள் திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பிரிவினையைத் தூண்டும் வகையிலும் பேசிவரும் இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் இன்று (07.07.2020) விடுதலைக்களம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராசிபுரத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு முழக்கத்தை எழுப்பினார்.
நாயக்கர் - நாயுடு சமூகத்தை கொச்சைப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடு - விடுதலைக்களம் போராட்டம்.
குறிச்சொற்கள்