தோழர் ரங்கசாமி நாயக்கர் இயற்கை எய்தினார்.
திருப்பூர் மாவட்டம், மண்ணரை, பாரப்பாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக விருந்தோம்பல் பிரிவு துணைத் தலைவரும், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கோல்டன் கிளப் உறுப்பினருமான திரு.ரத்தினசாமி அவர்களின் தந்தையாருமான ஆர்.ரங்கசாமி நாயக்கர் அவர்கள் இன்று (24.05.2024) அதிகாலை வயது மூப்பின்காரணமாக இயற்கை எய்தினார்.
திரு.ஆர்.ரங்கசாமி நாயக்கர் மறைவுக்கு சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்க தலைவர் திரு.எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கோல்டன் கிளப் உறுப்பினரும், சமுதாய நலச்சங்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய ஊன்று கோளாகவும், அனைத்து முன்னெடுப்புகளிலும் உறுதுணையாக இருந்தவருமான திரு.ரத்தினசாமி அவர்களின் தந்தையாரின் மறைவைக்கேட்டு அதிர்ச்சியுற்றதாகவும், அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதாகவும், தந்தையாரை இழந்துவாடும் சிறந்த விருந்தோம்பலுக்கு சொந்தக்காரரான ரத்தினசாமி மற்றும் குடும்பத்தினர், உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.