Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
கோவை திருமண வரவேற்பில் காவல்துறை உயரதிகாரிகள் நேரில் வாழ்த்து!

கோவை திருமண வரவேற்பில் காவல்துறை உயரதிகாரிகள் நேரில் வாழ்த்து!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், கொக்கராயன்கோட்டை மு.ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஆர்.நாகராஜன் - திருமதி என்.வனிதா ஆகியோரின் அன்பு மகன் என்.பிரபாகரன் பி.இ,  கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் வக்கம்பாளையம் ஊர்பண்ணாடி திரு.என்.முருகானந்தம் - திருமதி.எம்.ஜோதிலட்சுமி ஆகியோரின் அன்புமகள் எம்.விஷ்ணுபிரியா பி.டெக் ஆகியோரின் திருமண வரவேற்புவிழா நேற்று (23.08.2023) மாலை பொள்ளாச்சியிலுள்ள விஜய் மஹாலில் நடைபெற்றது.


இந்த திருமண வரவேற்புவிழாவில் கோவை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் (உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு) திரு.கிருஷ்ணன், சிறப்புக்காவல்படை துணை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் , ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.மாசிலாமணி, நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி, செயலாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் சரவணன், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.சிவக்குமார், தெற்கு மாவட்ட தலைவர் திரு.குணசேகரன், மகளிரணி அமைப்பாளர் திருமதி.பாக்கியலட்சுமி, திருமதி. நஞ்சாத்தாள், திமுக பிரமுகர்கள் திரு.தேவராஜ், திரு.தங்கராஜ், தொழிலதிபர் திரு.துரைசாமி, ஈசனத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ராமசாமி, கட்டபொம்மன் பர்பிள் கிளப் உறுப்பினர் திரு.சிவசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி திரு.கலியமூர்த்தி ஐஏஎஸ் சிறப்புரையாற்றினார். திருமணத்திற்கு வருகை தந்தவர்களை மணமக்கள் வீட்டார் வரவேற்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Wedding Reception thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண