Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
பொதுமக்கள் சேவையில் ஊராட்சி மன்றத் தலைவர்

பொதுமக்கள் சேவையில் ஊராட்சி மன்றத் தலைவர்

கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கடைவீதி பகுதியில், பயன்பாடற்ற நிலையிலுள்ள பொதுக் கழிப்பிடத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டுவரும் நோக்கில், ஊரட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி அவர்களின் சீறிய முயற்சியால், நவீன “உயிரி தொழில் நுட்ப முறையில் கழிவு நீர் தொட்டி”  (மேக் இந்திய நிறுவனத்தின் – பயோ டைஜிஸ்டர் முறையிலான செப்டிக் டேங்க்) அமைக்கப்பட்டுள்து.  இந்த கழிவு நீர் தொட்டியில் உள்ள பாக்டீரியாக்கள் மனித கழிவுகளை உண்டு சுத்தீகரித்து நன்னீராக வெளியேற்றுகிறது. 


இந்த மறுசுழற்சி முறையால் பூமியின் நீர் மட்டம் உயர்வதோடு, தண்ணீர் வீணாவதும்,  மாசுபடுவதும் முற்றிலும் தவிர்க்கப்படும். மறுசுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட்ட  நீரை செடி,கொடிகள்,மரம் வளர்ப்பு, பூங்காக்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்துவதின் மூலம் சுற்றுப்புற சூழலை மேம்படுத்த முடியும்.  கரூர் மாவட்டதில் முதல் முறையாக ஈசநத்தம் ஊராட்சியில் அறிமுகம் செய்யபட்டுள்ளது  என்பது குறிபிடத்தக்கது. பொதுவாழ்வில் செம்மையாக செயல்பட்டு பெருமை சேர்க்கும் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு பொதுமக்கள் சேவையில் ஊராட்சி மன்றத் தலைவர்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண