Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சமுதாய தியாகிகள் - விளாத்திக்குளம் - திரு.பொன்னுசாமி நாயக்கர்

சமுதாய தியாகிகள் - விளாத்திக்குளம் - திரு.பொன்னுசாமி நாயக்கர்

விளாத்திகுளம் மாப்பிள்ளைசாமி என்றழைக்கப்பட்ட பொன்னுசாமி நாயக்கர், விளாத்திகுளம் நல்லப்பசாமியின் உடன்பிறந்த தங்கதுரைச்சி அம்மாளின் மகன் ஆவார். இவர் ஆற்றிய சமுதாயப் பணிகள் கணக்கிலடங்காதவை. தேசகாவல் பணியை திறம்பட செய்ததற்காக கிடைத்த நிலங்களை விற்று நம்மின மக்களின் வழக்குகளை நடத்தியவர். காடல்குடி பாளையக்காரா் குசலவீர கஞ்ஜெய நாயக்கரின் பேரனான இவர் பழுத்த காங்கிரஸ்காரா். விளாத்திகுளம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது இவர் ஆற்றிய மக்கள்பணிகளுக்காகவும், பஞ்சம் வந்த காலத்தில் கஞ்சித்தொட்டி அமைத்து மக்களின் பாராட்டை பெற்றவர். பாஞ்சாலங்குறிச்சி, காடல்குடி பாளையக்காரா்கள் பயன்படுத்திய வாளை, சிவகாசி நாயக்கர் தெப்பம் அருகே உள்ள தனியார் அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாத்தவர். அந்த வாள் இன்றும் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு திரு.பொன்னுசாமி நாயக்கர் - Mr.Ponnusamy Naicker

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண