Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
இரவில் கொடி மரம்! விடிந்ததும் மறைந்தது! - கரூரில் பரபரப்பு

இரவில் கொடி மரம்! விடிந்ததும் மறைந்தது! - கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், வெங்கக்கல்பட்டியில் தொட்டியநாயக்கர் சமூகத்தினர் வணங்கும் பொம்மதேவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் கொடிக்கம்பம் நடமுயன்றதை எதிர்த்து விடுதலைக்களம் கட்சி வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மற்றும் ஊர்பொதுமக்கள்  சார்பில் கடந்த ஆக'16, திங்கள்கிழமையன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் முடிவில் காவல்துறை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கம்பளத்தார் மீது பொய்வழக்கு போடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவ்விடத்தில் தமிழ்புலிகள் கட்சி கொடிக்கம்பம் இரவோடு இரவாக நடப்பட்டது. காலையில் தங்கள் கோவில் இடத்தில் கொடிக்கம்பமிருப்பதை கண்டு திடுக்கிட்ட தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அத்துமீறி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்றி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண