தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE

முக்கிய செய்திகள்

அனைத்தும் காண
பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன்
வாழ்க்கை வரலாறு

பாஞ்சாலங்குறிச்சியின் வீர மரபு, கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான தன்னாட்சி குரல், கயத்தாரில் நிலைத்த தியாக நினைவு ஆகியவற்றை அழகான காலவரிசையில் படிக்கலாம்.

வரலாறு முழுவதும் படிக்க
வீரபாண்டிய கட்டபொம்மன்

பிரபலங்கள்

மேலும் காண

செய்திகள்

மேலும் காண

சடங்கு & சம்பிரதாயம்

மேலும் காண

விழுதுகள்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

ஆன்மீகம்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

YouTube செய்திகள்

மேலும் காண

புகைப்பட தொகுப்பு

விழுதுகள்

செய்தி துணுக்குகள்

வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ

<p>வியட்நாம் துறைமுகத்திலிருந்து சீனாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சர்வதேச சரக்குக் கப்பலில் பணியாற்றிய தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெய்கண்ணன் (34) திடீரென உயிரிழந்தார். வெளிநாட்டில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்துக்குப் பின்னர், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் உடல் பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக ஜெய்கண்ணன் குடும்பத்தினரும், இராஜகம்பள சமுதாயத்தினரும் துரை வைகோவுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.</p><p><b>கடலில் நிகழ்ந்த சோகம்:</b></p><p>தூத்துக்குடி மாவட்டம் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த கல்வெட்டு செல்வத்தின் இளைய மகன் ஜெய்கண்ணன், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புகழ்பெற்ற சர்வதேச கப்பல் மேலாண்மை நிறுவனமான Zodiac Maritime Agencies-இல் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சங்கீதா மயில். இவரது மூத்த சகோதரர் கணேஷ், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.</p><p>கடந்த 27.04.2026 அன்று, நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் வியட்நாம் துறைமுகத்திலிருந்து சீனாவை நோக்கிப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது ஜெய்கண்ணன் பணிக்கு வராததால், சக ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தனர். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகக் கருதி எழுப்பாமல் திரும்பிச் சென்றனர்.</p><p>இதற்கிடையில் கப்பல் வியட்நாமிலிருந்து புறப்பட்டுவிட்டது. பின்னர் மீண்டும் அறைக்குச் சென்று பார்த்தபோது, அதே நிலையில் இருந்த ஜெய்கண்ணனை எழுப்ப முயன்றபோதுதான் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.</p><p><b>கப்பலிலேயே பாதுகாக்கப்பட்ட உடல்: </b></p><p>கப்பல் ஏற்கனவே கடலுக்குள் பயணித்துக் கொண்டிருந்ததால் உடனடியாக கரை சேர முடியவில்லை. மேலும், கப்பலில் உடலைப் பாதுகாக்கும் சிறப்பு வசதிகள் இல்லாததால்,மீன்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டியில் (Freezer) அவரது உடலை பாதுகாத்து வந்தனர்.</p><p>இறுதியாக 08.05.2026 அன்று கப்பல் சீனத் துறைமுகத்தை வந்தடைந்ததும், ஜெய்கண்ணன் உடல் கரைக்கு இறக்கப்பட்டது.</p><p><b>துரை வைகோவின் உடனடி தலையீடு: </b></p><p>ஜெய்கண்ணன் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவருவதற்காக அவரது குடும்பத்தினர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவை அணுகினர்.</p><p>இதையடுத்து துரை வைகோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை உடனடியாகக் கொண்டு சென்று, உடலை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், தேவையான ஆவணங்கள் மற்றும் அலுவலக நடைமுறைகளை விரைந்து நிறைவு செய்து இந்தியாவிற்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.</p><p>அதன் பேரில் சீனாவில் ஜெய்கண்ணன் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேவையான அனைத்து நிர்வாக நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்டன.</p><p><b>இரண்டு மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய உடல்:</b></p><p> சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 21.06.2026 அன்று ஜெய்கண்ணன் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், ஜெய்கண்ணன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p><p>குடும்பத்தினரை நெகிழச் செய்த மனிதநேயம் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு மட்டுமல்லாமல், இறுதி மரியாதையில் பங்கேற்க தனது கட்சி நிர்வாகிகளையும் துரை வைகோ அனுப்பி வைத்திருந்தது ஜெய்கண்ணன் குடும்பத்தினரை நெகிழ்ச்சியடையச் செய்தது.</p><p> </p><p>தங்களது இக்கட்டான சூழலில் உறுதுணையாக இருந்து உதவிய துரை வைகோவுக்கு ஜெய்கண்ணன் குடும்பத்தினரும், இராஜகம்பள சமுதாயத்தினரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.</p>

மேலும் படிக்க

செய்தி துணுக்குகள்

திருட வந்ததை மறந்து புத்தகத்தில் மூழ்கிய திருடன்!

<p><span style="font-size: 1rem;"><b>வாசிப்பின் சுவை திருடனையே மாற்றிய சம்பவம்!</b></span></p><p>ஒரு நல்ல புத்தகம் மனிதனை நேரம் போவதே தெரியாமல் ஆழ்த்திவிடும் என்பார்கள். ஆனால், அந்த வாசிப்புச் சுவை ஒரு திருடனையே திருட்டை மறக்கச் செய்தது என்றால் நம்ப முடிகிறதா?</p><p>அப்படிப்பட்ட வினோத சம்பவம்தான் 2024 ஆகஸ்ட் மாதத்தில் இத்தாலியின் தலைநகர் ரோம் (Rome) நகரில் நடைபெற்றது. உலகம் முழுவதும் ஊடகங்களில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், புத்தக வாசிப்பின் ஈர்ப்பைப் பற்றிய விவாதத்தையும் ஏற்படுத்தியது.</p><p><b>என்ன நடந்தது?</b></p><p>2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரவு, 38 வயதுடைய இத்தாலியர் ஒருவர் ரோம் நகரின் பிராத்தி (Prati) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிற்குள் பால்கனி வழியாக நுழைந்தார். 71 வயதுடைய வீட்டின் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், மதிப்புமிக்க பொருட்களைத் திருடுவதே அவரது நோக்கமாக இருந்தது.</p><p>ஆனால், படுக்கையறையில் இருந்த மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகம் அவரது கவனத்தை ஈர்த்தது.</p><p>அந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்த அவர், அதன் உள்ளடக்கத்தில் முழுமையாக ஈர்க்கப்பட்டார். சில நிமிடங்களில் திருட வந்த நோக்கமே மறந்து, புத்தகத்தை வாசிப்பதில் ஆழ்ந்துவிட்டார்.</p><p>நேரம் கடந்ததே தெரியாமல் படித்துக்கொண்டிருந்தபோது, வீட்டின் உரிமையாளர் விழித்துக் கொண்டு அவரைக் கண்டார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தப்பிக்க முயன்ற அந்த நபர் பின்னர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மற்றொரு வீட்டிலிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விலையுயர்ந்த ஆடைகளும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.</p><p><b>திருடனின் பெயர் வெளியிடப்பட்டதா?</b></p><p>பெரும்பாலான சர்வதேச ஊடகங்கள் அவரது பெயரை வெளியிடவில்லை. இருப்பினும், சில இத்தாலிய மற்றும் பிரிட்டிஷ் ஊடகங்கள், அந்த நபரின் பெயர் Daniele Liquori என்றும், அவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர் என்றும் குறிப்பிட்டுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ காவல்துறை அறிவிப்புகளில் அவரது பெயர் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, இதை உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே கருத வேண்டும்.</p><p><b>திருடனை மயக்கிய அந்தப் புத்தகம் பெயர் என்ன?</b></p><p>திருடனின் கவனத்தை முழுமையாக ஈர்த்த நூலின் பெயர் "The Gods at Six O'Clock" (இத்தாலிய மொழியில்: Gli Dei alle Sei – L'Iliade all'ora dell'aperitivo).</p><p>இது சாதாரண புராண நூல் அல்ல. உலகப் புகழ்பெற்ற கிரேக்கக் காவியமான ஹோமரின் "இலியட்" (The Iliad) கதையை, வீரர்களின் பார்வையில் அல்லாமல் கிரேக்கக் கடவுள்களின் பார்வையில் புதுமையாக விளக்கும் நூலாகும்.</p><p>இன்றைய மனித வாழ்க்கை, அரசியல், அதிகாரம், போர், மனித உணர்வுகள் போன்றவற்றை பழம்பெரும் காவியத்துடன் இணைத்து சிந்திக்க வைக்கும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அதனால்தான், ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்த திருடன்கூட அதில் முழுமையாக ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p><b>நூலாசிரியர் யார்?</b></p><p>இந்த நூலை எழுதியவர் Giovanni Nucci.</p><p>இவர் இத்தாலியைச் சேர்ந்த எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் கிரேக்க–ரோமானிய புராணங்கள், இலக்கியம், குழந்தைகளுக்கான மறுகதையாக்கங்கள் ஆகியவற்றில் சிறப்பாக எழுதி வருபவர். பழம்பெரும் கிரேக்க இலக்கியங்களை நவீன வாசகர்களுக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் முயற்சிகளுக்காகவும் அறியப்படுகிறார்.</p><p>ஆசிரியரின் நகைச்சுவையான பதில்</p><p>இந்தச் சம்பவம் குறித்து அறிந்த Giovanni Nucci, சிரிப்புடன்,</p><p><span style="font-size: 1rem;">"அவரைக் கண்டுபிடித்து என் புத்தகத்தின் ஒரு பிரதியை பரிசாக வழங்க விரும்புகிறேன். ஏனெனில், அவர் பாதியிலேயே படித்துக் கொண்டிருக்கும்போதே கைது செய்யப்பட்டிருப்பார். இந்த முறை முழுமையாகப் படித்து முடிக்கட்டும்."&nbsp;</span><span style="font-size: 1rem;">என்று கூறினார்.</span></p><p>மேலும்,"இது ஒரு வினோதமான சம்பவம் மட்டுமல்ல; மனிதநேயமும் கலந்த ஒரு நிகழ்வு" என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.</p><p>இந்தச் செய்தி வெளியாகியதும் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானது.</p><p>"ஒரு நல்ல புத்தகம் திருடனைக் கூட திருடுவதை மறக்கச் செய்துவிட்டது!", "புத்தகத்தின் சக்திக்கு இதைவிட சிறந்த விளம்பரம் வேறு என்ன?" போன்ற ஆயிரக்கணக்கான கருத்துகள் இணையத்தில் பகிரப்பட்டன.</p><p>ஒரு புத்தகம் மனிதனின் எண்ணங்களை மாற்றும்; சில நேரங்களில் அவனது செயல்களையும் மாற்றிவிடும் என்பதற்கு, இத்தாலியில் நடந்த இந்த வினோத சம்பவம் மறக்க முடியாத உதாரணமாக மாறியுள்ளது.</p>

மேலும் படிக்க