தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ • திருட வந்ததை மறந்து புத்தகத்தில் மூழ்கிய திருடன்! • ஆளும்கட்சியான தவெக மீது எழும் குதிரை பேரம் குற்றச்சாட்டு - காசிராஜன் கடும் விமர்சனம். • தேசிய அளவிலான போட்டியில் எஸ்.எம். ஜஸ்வின் தங்கப்பதக்கம் வென்று சாதனை! • ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வழங்குக; எடப்பாடியாரிடம் நேரில் வலியுறுத்தல்: • வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ • திருட வந்ததை மறந்து புத்தகத்தில் மூழ்கிய திருடன்! • ஆளும்கட்சியான தவெக மீது எழும் குதிரை பேரம் குற்றச்சாட்டு - காசிராஜன் கடும் விமர்சனம். • தேசிய அளவிலான போட்டியில் எஸ்.எம். ஜஸ்வின் தங்கப்பதக்கம் வென்று சாதனை! • ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வழங்குக; எடப்பாடியாரிடம் நேரில் வலியுறுத்தல்:

முக்கிய செய்திகள்

அனைத்தும் காண
பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன்
வாழ்க்கை வரலாறு

பாஞ்சாலங்குறிச்சியின் வீர மரபு, கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான தன்னாட்சி குரல், கயத்தாரில் நிலைத்த தியாக நினைவு ஆகியவற்றை அழகான காலவரிசையில் படிக்கலாம்.

வரலாறு முழுவதும் படிக்க
வீரபாண்டிய கட்டபொம்மன்

பிரபலங்கள்

மேலும் காண

செய்திகள்

மேலும் காண

சடங்கு & சம்பிரதாயம்

மேலும் காண

விழுதுகள்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

ஆன்மீகம்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

YouTube செய்திகள்

மேலும் காண

புகைப்பட தொகுப்பு

விழுதுகள்

அரசியல்

EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்!

<p>இந்தியாவில் சமூக நீதி மற்றும் இடஒதுக்கீடு குறித்து பல தசாப்தங்களாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு, உயர்சாதிகளில் உள்ள ஏழைகளுக்கும் அரசுப் பணிகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் பங்கீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p>ஆனால், இந்த ஒதுக்கீடு நடைமுறையில் யாருக்குப் பயன் அளிக்கிறது என்ற கேள்வி இன்று தீவிரமாக எழுந்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான UPSC குடிமைப் பணித் தேர்வில் EWS ஒதுக்கீட்டின் கீழ் தேர்வானவர்களின் பின்னணியைப் பற்றிய தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய சமீபத்திய ஆய்வு, இந்த விவாதத்திற்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.</p><p>2025 ஆம் ஆண்டுக்கான UPSC குடிமைப் பணித் தேர்வில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான (EWS) 10% ஒதுக்கீட்டின் கீழ் 104 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். EWS ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம், ஆண்டுக்கு ₹8 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட உயர்சாதி ஏழைகளுக்கு வாய்ப்பளிப்பதாகும். ஆனால் தேர்வானவர்களின் பின்னணி குறித்த ஆய்வுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.</p><p><b>எண்ணிக்கைகள் என்ன சொல்கின்றன?</b></p><p>2025 ஆம் ஆண்டு EWS ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான 104 பேரில்:</p><p>84 பேர் (80.8%) ஏதாவது ஒரு UPSC பயிற்சி நிலையத்தில் பயின்றவர்கள்.</p><p>67 பேர் (64.4%) பிரபலமான பயிற்சி மையங்களில் ₹2.5 லட்சம் முதல் ₹3.5 லட்சம் வரை கட்டணம் செலுத்தி பயின்றவர்கள்.</p><p>46 பேர் (44.4%) ஆண்டுக்கு ₹1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் கல்வி கற்றவர்கள்.</p><p>28 பேர் (26.9%) வணிகம் அல்லது நிறுவன உரிமையாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.</p><p>10 பேர் (9.6%) கார்ப்பரேட் அல்லது பெரிய தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள்.</p><p>47 பேர் (45%) நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT, NIT, Delhi University மற்றும் JNU போன்றவற்றில் கல்வி பயின்றவர்கள்.</p><p>இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. பல லட்சம் ரூபாய் செலவில் UPSC பயிற்சி பெறும் பொருளாதார வலிமை கொண்ட குடும்பங்களும், EWS ஒதுக்கீட்டின் பயனாளிகளாக இருப்பது அதன் அடிப்படை நோக்கத்துடன் பொருந்துகிறதா?</p><p><b>உண்மையான ஏழைகளின் வெற்றியும் இருக்கிறது:</b></p><p>இந்த விவாதத்தின் மறுபுறம், பாதுகாப்பு காவலரின் மகன், ரயில்வே சுமைதூக்கும் தொழிலாளியின் மகள், பேருந்து நடத்துநரின் மகன் போன்ற பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்த ஒதுக்கீட்டின் மூலம் முன்னேறியுள்ளனர். அதாவது, EWS ஒதுக்கீடு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று கூற முடியாது. ஆனால் அதன் பலன்கள் மிகவும் தேவையுள்ளவர்களுக்கே சென்று சேருகிறதா என்ற கேள்வி தொடர்ந்து நிலவுகிறது. ஓபிசி இடஒதுக்கீட்டில் காட்டப்படும் கெடுபிடி EWS பிரிவில் இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.</p><p><b>பீமாரு மாநிலங்களின் ஆதிக்கம்:</b></p><p>EWS ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான 104 பேரில் 73 பேர் உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதில் உத்தரப் பிரதேசம் (25), பிகார் (17), மத்தியப் பிரதேசம் (14), ஹரியானா (9), ராஜஸ்தான் (8) ஆகிய மாநிலங்கள் சேர்ந்து மொத்த வெற்றியாளர்களில் சுமார் 70% பங்கைக் கொண்டுள்ளன.</p><p>இவற்றில் உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் கடந்த காலங்களில் "BIMARU States" என்று அழைக்கப்பட்டன. "BIMAR" என்ற இந்தி சொல்லுக்கு "நோய்வாய்ப்பட்ட" அல்லது "பின்தங்கிய" என்று பொருள். மக்கள் தொகை உயர்வு, கல்வி பின்தங்கல், வறுமை, குறைந்த தொழில்மயமாக்கல் போன்ற காரணங்களால் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.</p><p>இந்தப் பின்னணியில், EWS ஒதுக்கீட்டின் பயனாளிகளில் பெரும்பான்மையானோர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது, இந்தியாவில் பிராந்திய வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் இன்னும் நீடிக்கின்றன என்பதை நினைவூட்டுகிறது.</p><p><b>EWS குறித்து உச்சநீதிமன்றம் கூறியது என்ன?</b></p><p>EWS ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் அரசியலமைப்புச் சட்டப்பூர்வ தன்மை உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டு Janhit Abhiyan vs Union of India வழக்கில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு 3:2 என்ற பெரும்பான்மை தீர்ப்பின் மூலம் EWS ஒதுக்கீட்டை செல்லுபடியாக அறிவித்தது. உச்சநீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதல்ல என்றும், EWS-க்காக வழங்கப்பட்ட கூடுதல் 10% ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்றும் தீர்ப்பளித்தது.</p><p>அதே நேரத்தில், சிறுபான்மை கருத்தாக தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகள், SC/ST/OBC பிரிவுகளில் உள்ள ஏழைகளை EWS ஒதுக்கீட்டிலிருந்து முழுமையாக விலக்குவது சமத்துவக் கொள்கைக்கு எதிரானதாக இருக்கலாம் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.</p><p>இதனால் EWS ஒதுக்கீட்டின் சட்டப்பூர்வத்தன்மை இன்று கேள்விக்குட்படுத்தப்படவில்லை. ஆனால் அதன் தகுதி விதிமுறைகள், பயனாளிகளின் அடையாளம் மற்றும் நடைமுறை அமலாக்கம் குறித்து அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p> </p><p>சமூக நீதியின் நோக்கம் சலுகைகளை உருவாக்குவது அல்ல; மிகவும் தேவைப்படுபவர்களை சென்றடைவதுதான். EWS அமைப்பு அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுகிறதா என்பது இன்று இந்தியா எதிர்கொள்ளும் முக்கியமான கொள்கைச் சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதிகாரம், வாய்ப்புகள் என்றால் சொந்த சாதி ஏழைகளின் வாய்ப்புகளைக்கூட தட்டிப்பறிக்கும் உயர்சாதி வர்க்கம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வாய்ப்புகள் 75 ஆண்டுகளாக உரிய அளவில் கிடைக்காமல் செய்து எப்படியெல்லாம் அனுபவித்து வருவர் என்ற நியாயமான கேள்வி எழாமல் இல்லை.</p>

மேலும் படிக்க

அறிவியல்

மழைத்துளிகள் ஏன் கோள வடிவில் இருக்கின்றன?

<p>மழைத்துளிகள் ஏன் கோள வடிவில் இருக்கின்றன? அனல் கக்கும் கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் தமிழகம் முழுவதும் மழைக்காக ஏங்கும் நேரத்தில், மழையை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. அதிலும் முதல் மழையில் நனைவதன் மகிழ்ச்சியே தனி.</p><p>மழை எவ்வாறு உருவாகிறது என்பதை நாம் பள்ளிப் பருவத்திலிருந்தே படித்து வருகிறோம்.</p><p>பூமியில் உள்ள நீர், சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்கிறது. மேலே செல்லச் செல்ல அந்த நீராவி குளிர்ச்சியடைந்து, மிகச் சிறிய நீர்த் துகள்களாக ஒடுக்கப்படுகிறது. இவ்வாறு உருவாகும் எண்ணற்ற நீர்த் துகள்கள் ஒன்றோடொன்று இணைந்து மேகங்களை உருவாக்குகின்றன.</p><p>ஆரம்பத்தில் இந்த நீர்த் துகள்கள் மிகச் சிறியதாக இருக்கும். பின்னர் மேலும் பல துகள்கள் இணைவதால் அவை பெரிதாகின்றன. ஒரு கட்டத்தில் அவற்றின் எடை அதிகரித்து, காற்று தாங்க முடியாத அளவுக்கு வந்தவுடன் பூமியை நோக்கி விழத் தொடங்குகின்றன. அவையே நாம் காணும் மழைத்துளிகள்.</p><p>ஆனால், மழைத்துளிகள் ஏன் முக்கோணமாகவோ, சதுரமாகவோ இல்லாமல் கோள வடிவில் இருக்கின்றன என்று என்றாவது யோசித்திருக்கிறோமா?</p><p>பொதுவாக ஓவியங்களிலும், சின்னங்களிலும் மழைத்துளிகள் மேலே கூர்மையாகவும் கீழே உருண்டையாகவும், கண்ணீர்த் துளி போன்ற வடிவில் வரையப்படுகின்றன. இதனால் அவற்றின் உண்மையான வடிவமும் அப்படித்தான் என்று பலர் நினைக்கிறார்கள்.</p><p>ஆனால் உண்மையில், காற்றில் மிதக்கும் அல்லது உருவாகும் மழைத்துளிகள் கோள வடிவில்தான் உள்ளன. ஒளி பிரதிபலிப்பு, காற்றில் அவை நகரும் விதம் மற்றும் நாம் பார்க்கும் கோணம் போன்ற காரணங்களால் அவை கண்ணீர்த் துளி போன்ற வடிவில் தோன்றுகின்றன.</p><p>கோள வடிவத்திற்கான காரணம் நீர்த்துளிகள் கோள வடிவில் இருப்பதற்கான முக்கிய காரணங்கள் பரப்பு இழுவிசை (Surface Tension) மற்றும் நீரின் ஒட்டுந்தன்மை (Cohesion) ஆகும்.</p><p>நீர் மூலக்கூறுகள் ஒன்றையொன்று வலுவாக ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளன. இதுவே ஒட்டு விசை (Cohesive Force) எனப்படுகிறது. இந்த ஈர்ப்பு விசையால் நீர் மூலக்கூறுகள் சிதறாமல் ஒன்றாக இணைந்து துளியாக மாறுகின்றன.</p><p>அதே நேரத்தில், நீரின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகள் உள்நோக்கி இழுக்கப்படுவதால், நீர்த்துளி அதன் பரப்பளவைக் குறைக்க முயற்சிக்கிறது. இதுவே பரப்பு இழுவிசை ஆகும்.</p><p>கணிதவியல் ரீதியாக, ஒரு குறிப்பிட்ட கொள்ளளவிற்கு (Volume) மிகக் குறைந்த மேற்பரப்பளவை (Surface Area) கொண்ட வடிவம் கோளம் (Sphere) மட்டுமே. எனவே இயற்கையாகவே நீர்த்துளிகள் கோள வடிவத்தை அடைகின்றன.</p><p>இதே காரணத்தினால்தான் இலைகளின் மீது காணப்படும் பனித்துளிகள், காற்றில் மிதக்கும் சிறிய நீர்த்துளிகள் மற்றும் சோப்புக் குமிழிகளும் பெரும்பாலும் கோள வடிவத்திலேயே காணப்படுகின்றன.</p><p>பூமியிலும் விண்வெளியிலும் மழைத்துளிகள் மிகச் சிறிய நீர்த்துளிகள் கிட்டத்தட்ட முழுமையான கோள வடிவில் இருக்கும்.</p><p>ஆனால் பெரிய மழைத்துளிகள் பூமியை நோக்கி வேகமாக விழும்போது, அவற்றின் மீது காற்றின் எதிர்ப்பு அதிகரிக்கிறது. இதன் காரணமாக துளியின் கீழ்பகுதி சற்று தட்டையாக மாறும். மிகப் பெரிய மழைத்துளிகள் சில நேரங்களில் குடையின் மேற்பகுதியைப் போன்ற வடிவத்தை அடைந்து, பின்னர் சிறிய துளிகளாக உடைந்துவிடுகின்றன.</p><p>மாறாக, புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் வெளிப்புற அழுத்தங்களும் காற்று எதிர்ப்பும் இல்லாததால், பரப்பு இழுவிசை மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே அங்குள்ள நீர்த்துளிகள் கிட்டத்தட்ட முழுமையான கோள வடிவில் மிதந்து காணப்படுகின்றன.</p><p> </p><p>அதனால், நாம் பூமியில் காணும் மழைத்துளிகள் சிறிதளவு வடிவ மாற்றம் அடைந்தாலும், அவற்றின் அடிப்படை இயற்கை வடிவம் கோள வடிவமே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.</p>

மேலும் படிக்க