தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்!

முக்கிய செய்திகள்

அனைத்தும் காண
Kattabomman Varalaru

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு

பாஞ்சாலங்குறிச்சியின் வீர மரபு, கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான தன்னாட்சி குரல், கயத்தாரில் நிலைத்த தியாக நினைவு ஆகியவற்றை அழகான காலவரிசையில் படிக்கலாம்.

வரலாறு முழுவதும் படிக்க
வீரபாண்டிய கட்டபொம்மன்

பிரத்யேக வரலாறு பக்கம்

பிரபலங்கள்

மேலும் காண

செய்திகள்

மேலும் காண

சடங்கு & சம்பிரதாயம்

மேலும் காண

விழுதுகள்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

ஆன்மீகம்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

YouTube செய்திகள்

மேலும் காண

புகைப்பட தொகுப்பு

விழுதுகள்

செய்தி துணுக்குகள்

முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!

<p>தமிழ்நாட்டின் 13 வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் நிருவன தலைவர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் விஜய் அவர்களுக்கு பதவிப்பிரமாணமும், இரகசியக்காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். இதனைத்தொடர்ந்து திரு.ஆனந்த், திரு.ஆதவ் அர்ஜுனா, திரு.செங்கோட்டையன் உள்ளிட்டவர்களுக்கு தமிழக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன் விவரம் வருமாறு,</p><p>17 வது சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மே4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் விஜய் தலைமையிலான தமிழக  வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைப்பதற்குத் தேவையான 118 தொகுதிகள் எந்தக்கட்சிக்கும் கிடைக்காத சூழலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் ஆதரவை தவெக நாடும்நிலை ஏற்பட்டது. இக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தன்னிச்சையாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் கூட்டணிக்கு தலைமை தாங்கிய திமுக தலைமையுடன் கலந்துபேசி தவெக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக நிலவிவந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.</p><p>நேற்று மாலை தவெக தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநரைச் சந்தித்து 118 பேர் கொண்ட ஆதரவுப்பட்டியலை வழங்கியதைத் தொடர்ந்து, விஜய் அவர்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதனடிப்படையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு விஜய் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், வெங்கட்ராமன், கீர்த்தனா, ராஜ்மோகன், அருண்ராஜ், நிர்மல்குமார், பிரபு ஆகியோருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.</p><p>விஜய் அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டபின் பொதுமக்கள் முன்னிலையில் மூன்று முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் உத்தரவாக 500 யூனிட் வரையிலான மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், இரண்டாவது உத்தரவாக பெண்கள் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' , மூன்றாவது உத்தரவாக மாவட்ட வாரியாக 'போதைப்பொருள் தடுப்பு படை' அமைக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.</p><p>விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர்கள், இடதுசாரி, விசிக உள்ளிட்ட ஆதரவுக் கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் 13வது முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு.ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் தமிழகத்தில் வாழும் இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.</p>

மேலும் படிக்க

செய்தி துணுக்குகள்

+2 தேர்வில் முதலிடம் பெற்ற கோபிகா, ஹரீஷ் ஆகியோருக்கு வாழ்த்து!

<p>ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள மாரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.மதிவாணன். தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கியில் செயலாளராகப் பணியாற்றி வரும் திரு.மதிவாணன் - திருமதி.அம்பிகா தம்பதியருக்கு ம.ஹரீஷ், ம,வர்ஷன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சக்தி சுகர்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பண்ணாரி அம்மன் பள்ளியில் முறையே 12 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயின்று வந்தனர். மூத்த மகன் ம.ஹரீஷ் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அதில் ஹரீஷ் 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து முதலிடம் பெற்ற ஹரீஷ்க்கு பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.</p><p><img src="https://thottianaicker.com/img/post/postimage/2026/05/09/11778309939.jpg" style="width: 100%;"><br></p><p>அதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள நடுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.இராஜேந்திரன். இவர் வேலூரில் வேளாண் பொறியியல் துறையில் அசிஸ்டன்ட் இஞ்சினியராகப் பணியாற்றிவரும் திரு.இராஜேந்திரன் - திருமதி. ஸ்ரீதேவி தம்பதியினர் இளையமகள் ஆர்.கோபிகா, கோபிசெட்டிபாளையத்திலுள்ள டி.கே.கே. மெட்ரிக்குலேசன் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். அதில் இவர் 600 க்கு 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனையடுத்து கோபிகாவுக்கு பள்ளி அசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கோபிகா ஏற்கனவே இதேபள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சகோதரி ஆர்.ஸ்ரீமிதா எம்சிஏ பட்டம் பெற்று எம்என்சி நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக இருந்து வருகிறார்.</p><p><img src="https://thottianaicker.com/img/post/postimage/2026/05/09/11778309861.jpg" style="width: 100%;"><br></p><p>கடந்த இருவருடங்களுக்குப் முன்பு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கோபிகாவுக்கு ஊர்பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கோபிகாவுக்கு கணினி பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ப்ளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்ற கோபிகா, ஹரீஷ் ஆகியோருக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள இராஜகம்பள சமுதாய மாணவச் செல்வங்களுக்கும்&nbsp; சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p>

மேலும் படிக்க